வடபழனி கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பம்!

வடபழனி கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பம்!

 ஜி.சாந்தகுமார்,

  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் தமிழர் பாரம்பரிய முறையில் வேஷ்டி அணிந்து வந்தார்.

 ஆளுநருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சிறப்பு தரிசன முறையில் சுமார் 20 நிமிடங்கள் வடபழனி முருகனை ஆளுநர் தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை குடும்பத்துடன் அவர் பார்த்தார்.

 ஆளுநர் வருகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில், மாலை 3 மணியிலிருந்து கோபுர நுழைவாயில் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.