வெற்றியை மாற்றி அறிவிக்க சதி! பாமகவினர் சாலை மறியல்!!

ஜி.கே.சேகரன்,

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிகை நடைபெற்ற நிலையில் காட்பாடியில் வெற்றியை மாற்றி அறிவிக்க சதி நடப்பதாக  கூறி பாமகவினர் சாலைமறியல் செய்தனர். மேலும் காவல்துறையினர் செய்தியாளர்களை மையத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள் - கணியம்பாடி ஒன்றியத்திலும் வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடிகள் ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்களை குறிவைத்து ஏடிஎஸ்பி கொதித்தார்.

வேலூர்மாவட்டம்,வேலூர்,கணியம்பாடி,அனைக்கட்டு,காட்பாடி,கேவிக்குப்பம்,குடியாத்தம்,பேர்ணாம்பட்டுஆகிய ஒன்றியங்களுக்கான தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் கணியம்பாடி மையத்தில் 13 ஆவது ஒன்றிய குழுவுக்கு கம்சமுத்திரத்தில் முதலில் பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த அறிவிப்பை மாற்றி சுயேட்ச்சை வேட்பாளர் வனிதா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 செய்வதறியாமல் திகைத்த காவல்துறையினர் வாக்கு எண்ணும் மைய கதவினை மூடியதோடு அங்கிருந்த முகவர்கள் வெளியேற்றினர்.

 அப்போது இதனை செய்தி சேகரித்த செய்தியாளர்களுக்கு  ஏ.எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. என்பவர் மிரட்டல் விடுத்தார்.

   படம் பிடிக்க கூடாது என மிரட்டியதுடன் கேமராவையும் பறிக்க முயன்றார்.

 இதன் பின்னர் நள்ளிரவு 3 மணிக்கு கணியம்பாடி ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டில்,திமுக வேட்பாளர் சீனிவாசனும்,இரண்டாவது வார்டில் பாமக வேட்பாளர் வேலாயுதமும்,மூன்றாவது வார்டு திமுக வேட்பாளர் லதாவும்,4 ஆவது வார்டில் திமுகவை சேர்ந்த மணிமேகலையும்,5 ஆவது வார்டில் திமுகவை சேர்ந்த திவ்யா வென்றதாக அறிவிக்கப்பட்டது

 அதே போல், 6 ஆவது வார்டு ஒன்றிய குழுவில் திமுக,சகதேவனும் ,7 ஆவது வார்டில் பாமகவை சேர்ந்த ஜெயலட்சுமியும்,8 ஆவது வார்டில் அதிமுக விஸ்வநாதனும்,9 ஆவது வார்டில் பாமகவை சேர்ந்த கஜேந்திரனும்,10 ஆவது வார்டில் பாமகவை சேர்ந்த நதியாவும்,13 ஆவது வார்டில் சுயேட்சை வேட்பாளர் வனிதாவும்  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த தேவிசிவாவும்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.

 இதே போன்று காட்பாடி ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 19 ஒன்றிய குழு உறுப்பினர்கள் திமுகவும்,ஒரு அதிமுகவும் ஒரு சுயேட்சையும் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

  இதில் சேனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாந்தி மணி முன்னிலை பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

  இருப்பினும், சுயேட்சை வேட்பாளர் பஞ்சாட்சரம் தகராறு செய்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

 இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க. வேட்பாளர் சாலைமறியலில் ஈடுபட்டார்.

 அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கியது.

 இது தொடர்பாக, பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்த செய்தியாளர்கள் அதனை படம் பிடித்தனர்.

  அதனைக் கண்டு ஆத்திரமடைந்த காவல்துறையினர் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் அராஜகம் செய்தனர்.

  இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

  இதே போன்று ஆரியமுத்து மோட்டூர் ஒன்றிய குழு உறுப்பினராக அதிமுக சேர்ந்த மோகன் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 ஆனால் அதனை அறிவிக்க கூடாது என அதிகாரிகளுக்கு திமுகவினர் அழுத்தம் கொடுத்ததால் அங்கும் டென்ஷன் ஏற்பட்டது

 உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினரின் கை சற்று ஓங்கியிருந்ததால் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக அடக்கி வாசித்தனர்.