பட்ஜெட் நகலை எரித்த இராணிப்பேட்டை விவசாயிகள்!

பட்ஜெட் நகலை எரித்த இராணிப்பேட்டை விவசாயிகள்!

கு.அசோக்,

 உர மாணியங்களுக்கான தொகை, பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக   

 இராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.   

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

  மத்திய அரசு மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு மிகுந்த பாதகமாக அமைந்து இருப்பதாக தெரிவித்து பட்ஜெட் தாக்கல் நகலினை தீயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இந்த போராட்டத்தின் போது மோடி தலைமையிலான அரசு செய்துள்ள பட்ஜெட் ஒரு லட்சம் கோடிக்கு மேல் உணவு தானியங்கள் மீது மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

  ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உரம் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

 முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகையானது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

 இவை காரணமாக விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழிலாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்து போராட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  இறுதியாக மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் நகலினை எரித்துவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனே தகவல் அறிந்து வந்த இராணிப்பேட்டை  போலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட  நபர்களை கலந்து செல்லும்படி தெரிவித்தனர்.