ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் பேரணி!

க.பாலகுரு,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கடந்த 17.12.2022 அன்று சேலத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட அறைக்கூவல் தீர்மானங்களின் அடிப்படையில் மூன்றாவது கட்ட இயக்கமாக மாவட்ட தலைநகரில் கோரிக்கை பேரணி நடைபெற்றது. இந்தக் கோரிக்கை பேரணியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வே.சோமசுந்தரம் தலைமை வகித்தார் மேலும் முன்னாள் மாநில செயலாளர் எம் சௌந்தரராஜன் பேரணியை துவக்கி வைத்தார்.
புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்.
முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனடியாக வழங்கிட வேண்டும்.
காலிப்பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை பணியில் உள்ள சத்துணவு ஊழியர்களைக் கொண்டே முழுமையாக அமுல்படுத்திட வேண்டும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சி&டி பிரிவு பணியிடங்களை காலி செய்யும் அரசாணை 152 மற்றும் 10 ஆகியவற்றினை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி. செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும்.கருவூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்படுத்தும் கணினி மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது
இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணி பனகல் சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் தொடங்கி, பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செ.பிரகாஷ், குரு சந்திரசேகரன் மாநில செயலாளர் த.நா.அ.அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்,பி மகாலிங்கம் மாவட்ட தலைவர் த.நா. நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம், எஸ் கரிகாலன் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்,கே அகோரம் மு மாநிலத் துணைத் தலைவர்.TNGEA,, ஏ.லதா மாநில செயலாளர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், டி இ இளங்கோவன் பொதுச் செயலாளர் முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கம், எஸ் செங்குட்டுவன் மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.