தண்ணிர் தொட்டி தாங்க ப்ளிஸ்!

தி.விநோத்,
தமிழகத்தில் தண்ணிர் பஞ்சம் என்கிற பேச்சே இல்லை.
அந்த அளவுக்கு மழை பெய்து நிலத்தடி நீர் பக்காவாக உள்ளது.
ஆனால், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை தாலுக்கா ராஜா நகரம், மோட்டூர் கிழக்கு பள்ளிப்பட்டு பகுதியில் தண்ணிர் இன்று மக்கள் அவதிப்படுகிறார்கள்.
அங்கும் தண்ணிர் உள்ளது? ஆனால் அதற்காக முறையான தொட்டி இல்லையாம்.
ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் தொட்டி பழுதட்ய்ந்து ஆண்டுகணக்கில் ஆகிவிட்டதாம்.
இதனால் அப்பகுதிவாசிகள் அந்த தொட்டியை சரி செய்ய சொல்லி தலைவர் உள்ளிட்டவர்களை நாடினார்கள், நாடுகிறார்கள் நாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆக சம்மந்தப்பட்ட பிளாக் அதிகாரிகள் மனுசு வைத்தால் நலம் என்கிறார்கள்.