முதல்வருக்காக தயாராகும் வேலூர் பஸ்ஸ்டேண்ட்! மனுக்களை பெற்ற அணைக்கட்டு எம் .எல் .ஏ.!

முதல்வருக்காக தயாராகும் வேலூர் பஸ்ஸ்டேண்ட்! மனுக்களை பெற்ற அணைக்கட்டு எம் .எல் .ஏ.!

  ஜி.கே.சேகரன், 

 வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினர்களும் பார்வையிட்டனர்.

 பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த பஸ் ஸ்டேண்ட் கட்டுமானப் பணியானது தரமாக கட்டபடவில்லை என்றும், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும் பலதரப்பினரிடமிருந்து புகார்கள் சொல்லப்பட்டன.

  இந்த விவகாரத்தில் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் நேரடியாக தலையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

  அது மட்டுமின்றி பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும், இந்த மாதம் முதலமைச்சர் வேலூர் வரவிருப்பதால் அதற்குள் பேருந்து நிலையம் தயார் ஆக வேண்டும் என்றும் கறார் காட்டினார்.

  இந்நிலையில் கடந்த வாரம் போன்றே இன்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் புடை சூழ ஆட்சியர் அவ்பர்கள் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து பணிகள்ளை முடுக்கிவிட்டார்.

  குறிப்பு:- இந்த கட்டுமானப்பணிகளை செய்யும் குமார் என்பவர் சத்துவாச்சாரி பகுதியில் சில ஏரியாவில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை  சரிவர செய்யாததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவரது டீம் ஒரு வீட்டை இடித்துள்ளனர். பல ஆண்டுகாலமாய் பயன்பாட்டிலிருந்து வந்த போர் லைன் குழாவை உடைத்து நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தண்ணிர் கிடைக்காமல் செய்துள்ளனர். இதையும் அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அப்பகுதிவாசிகளின் அவா?

  வரும் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் வந்து விழாவில் பங்கேற்கவுள்ளதால் அனைக்கட்டில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது - இதனை பரிசீலித்து முதல்வர் வருகையின் போது தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என கூறப்பட்டது.

  வேலூர்மாவட்டம்,அனைக்கட்டில் தனியார் திருமண மண்டபத்தில் வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து விழாவில் பங்கேற்கிறார் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளார்.

  அதற்காக அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடம் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

 இம்முகாமில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,அனைக்கட்டு ஒன்றிய தலைவர் பாஸ்கர் மற்றும் 22 துறைகளை சார்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெற்றனர் இதுவரையில் 1750 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

 அவைகளில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.