போலிசாரின் லஞ்சப் பட்டியலை வெளியிட்ட எஸ்.பி.க்கு பா.ஜ.க அண்ணாமலை பாராட்டு!

போலிசாரின் லஞ்சப் பட்டியலை வெளியிட்ட எஸ்.பி.க்கு பா.ஜ.க அண்ணாமலை பாராட்டு!

வி.கதிர்,

  சேலம் மாவட்ட போலிசாருக்கு, எந்ததெந்த பிரச்சனைக்கு எவ்வளவு லஞ்சம் என்கிற லிஸ்ட்டை எஸ்.பி.வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  சேலம் மாவட்டத்தில் உள்ள மணல் கடத்தல்காரர் ஒரு வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.20,000 லஞ்சம் கொடுக்கலாம். சிவில் தகராறு விலையோ அதிகமாக இருக்கு. அதற்கு லஞ்சமாக ரூ .1 லட்சம் வரை பெறப்படுகிறது.சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்ற ஒருவர் பிடிபட்டால், லஞ்சம் ரூ.3000 முதல் ரூ .5000 வரை போகலாம், லைசென்ஸ் இல்லாமல் பார்கள் நடத்துபவர்கள் ரூ .2,000 லஞ்சத்துடன் போலீஸ் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் என்று சேலம் போலீஸ் சுற்றறிக்கையில் லஞ்சம் குறித்த விலைப்புள்ளி பட்டியல் வெளியாகியிருக்கின்றன.

 சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீ அபினவ் ஐ.பி.எஸ், அவர்கள் இந்த  அசாதாரண சுற்றறிக்கையை அக்டோபர் 6, 2021 அன்று வெளியிட்டார்.  

  இது செய்தியாகவும் உருவெடுத்தது.

  ஆனாலும் ஊழல் நிறைந்த சில காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

   ஆகவே அனைத்து துணை மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டார்.

   இந்த சுற்றறிக்கையானது, "விழிப்புணர்வை வலுப்படுத்தி, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதிசெய்து, தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதற்காக வெளியிடப்பட்டது ஆகும்.

 சுற்றறிக்கையில் "பல்வேறு காரணங்களுக்காக அதாவது உரிமை மீறல், கடத்தல் நடவடிக்கைகள் போன்றவற்றில் காவல்துறையினர் வசூலித்த பணத்தின் விவரங்கள்" பட்டியலிடப்பட்டுள்ளன.

 அந்த நோட்டீஸின் படி, சில காவல்துறை அதிகாரிகள் “கஞ்சா/தடை செய்யப்பட்ட லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையாளர்கள், மணல் கடத்தல்காரர்கள், சூதாட்ட வீடுதிகள் நடத்துதல் மற்றும் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் போன்ற சமூக விரோதிகளிடம் இருந்து சட்டவிரோத திருப்தி பெற்று வருகின்றனர்.

  ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் துணை அதிகாரிகளிடம் இருந்து பணம் வசூல் செய்வதாகவும், வழக்கமான மனு விசாரணைக்காகவும் வசூல் தான் என அந்த சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

   சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது, அவர் டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக கூறினாராம்.

 பொதுவான கடை மூலம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு, ஒரு எஸ்ஐ ஒரு கடைக்கு ரூ .2,000 வரை வசூலிக்கிறார். ஆய்வாளர் ரூ .10,000 முதல் ரூ .60,000 வரை வசூலிக்கிறார்.

காவல்துறை அதிகாரிகள் அதாவது காவல் நிலைய எழுத்தாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு கிளை பணியாளர்கள், நெடுஞ்சாலை ரோந்து பணி அதிகாரிகள் போன்றவர்களின் அடிப்படையில் 'விகிதங்கள்' பிரிக்கப்பட்டுள்ளன.

  சுற்றறிக்கையின் நகல் சமூக ஊடகங்களில் கசிந்த பிறகு, ஊழல் இல்லாத காவல்துறை நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக சேலம் எஸ்பியின் நடவடிக்கைக்கு பலர் பாராட்டினர்.

  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ட்வீட் மூலம், ஊழலை எதிர்த்துப் போராட எஸ்பியின் வெளிப்படையான முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில்தமிழக அரசு சார்பில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.