டிப்போவில் தூங்கும் அரசு பேருந்துகள்!

எம். ரபிக் ராஜா,
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பயணிகள் பேருந்துகள் சரியான குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் 80- க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கும் நிலையில் அதில் 60 பேருந்துகள் மட்டுமே சரியான நேரங்களில் இயக்கப்படுகின்றது.
மீதமுள்ள 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வகையான காரணங்களால் கால தாமதமாக மற்றும் இயக்க முடியாத சூழ்நிலையிலும் உள்ளது.
இதனால் பேருந்து பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை நிர்வாகமும் தமிழக அரசும் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் பேருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரி வருகின்றனர்