மனவேதனையுடன் கபடி மாணவிகள்!

கு.அசோக்,

முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டிகள் நடந்தது இதில் 8 பள்ளிகள் 5 கல்லூரிகளின் மாணவிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

 சரியான அடிப்படை வசதிகளையும் முன் ஏற்பாடுகளையும் செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது

 வேலூர்மாவட்டம், காட்பாடியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

 இதில் கபடி போட்டி மாணவிகளுக்கு நடந்தது வேலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருந்தும் இந்த கபடி போட்டிகளில் வேறும் 8 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றன.

  மேலும் 5 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் மட்டுமே பங்கேற்று விளையாடினார்கள்.

 இந்த போட்டிக்காக எந்த ஒரு முன் ஏற்பாடும் செய்யவில்லை மாணவிகள் கொளுத்தும் வெய்யிலில் கபடி விளையாடியும் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை கூட விளையாட்டு துறை செய்யவில்லை.

 மேலும் மிக குறைந்த அளவிலேயே மாணவிகள் போட்டிகள் பங்கேற்றனர்.

  அவர்களும், கொளுத்தும் வெய்யிலில் மிகவும் அவதியடைந்தனர்.

  இந்த போட்டிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பங்கேற்று துவங்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் சுனில் ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா,மாமன்ற உறுப்பினர் விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  மாணவிகள் கபடி போட்டிகளில் பங்கேற்று குடிநீர் வசதி கூட இல்லை என மன வேதனையுடன் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.