வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

  ஜி.கே.சேகரன்,

 வேலூர்மாவட்டம்,பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் முத்துசாமி மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.    

  பேரணாம்பட்டு காவல் நிலையம் எப்படி செயல்படுகின்றது? காவல் நிலையம் தூய்மையாக வைத்துள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

  அதன் பின்பு காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

   பின்பு தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ் ஐ. தேவபிரசாத் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.