ரத்ததானம் ரோட்டில் சிந்த வேண்டாமே! கலெக்டர்!!

ரத்ததானம் ரோட்டில் சிந்த வேண்டாமே! கலெக்டர்!!

 கு.அசோக்,

 ரத்ததானம் வழங்க அனைவரும் முன் வந்து ஆபத்து காலத்தில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு தானமாக வழங்கி உதவிட வேண்டும் - வேலூர் அடுக்கம்பாறையில் ரத்த கொடையாளர்களுக்கு விருதுகள் சான்றுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

  வேலூர்மாவட்டம்,வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் மற்றும்  மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் ரத்ததான தின விழாவானது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

  இதில் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் பானுமதி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இந்த விழாவை ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்து அதிக முறை ரத்ததானம் செய்த ரத்த கொடையாளர்களுக்கு பதக்கங்கள் விருதுகள் சான்றுகளை வழங்கி பாராட்டினார்.

  பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் குழுவினர் உறுதிமொழியை எடுத்துகொண்டனர்

 விழாவில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் நீர் எவ்வாறு பூமிக்கும் உலகிற்கும் தேவையோ அது போல் மனிதர்களுக்கு ரத்தம் என்பது இன்றியமையாதது விபத்து காலங்களில் படுகாயம் அடைபவர்களுக்கு அவசர உதவிக்காக பிறர் அளிக்கும் ரத்தமானது அவர்களின் உயிரை காப்பாற்றும் ஆகவே அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வந்து உயிர்களை காப்பாற்ற வேண்டும், ரத்ததானம் செய்யுங்கள் ரோட்டில் சிந்த வேண்டாமே என்று கலெக்டர் பேசினார்.