பணி இருந்தாலும் குடும்பத்துடனும் நேரம் செலவழிங்க!போலிசுக்கு கூடுதல் ஆணையர் அறிவுறை!

பணி இருந்தாலும் குடும்பத்துடனும் நேரம் செலவழிங்க!போலிசுக்கு கூடுதல் ஆணையர் அறிவுறை!

   ஜி.கே.சேகரன்

  காவல்துறையில் பணியாற்றவுள்ள நீங்கள் சுய ஒழுக்கத்துடனும் பணி ஒழுக்கத்துடனும் பணியாற்றிட மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் சேவூரில் நடைபெற்ற கமாண்டோ காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் லோகநாதன் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேச்சு

  வேலூர் மாவட்டம் ,காட்பாடி அருகே சேவூரில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கமாண்டோ பயிற்சி 102 காவலர்களுக்கு ஏழுமாதகால பயிற்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை பெருநகர  காவல்துறை கூடுதல் ஆணையர் லோகநாதன் கவாலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு சிறப்பாக பயிற்சி முடித்த காவலர்களுக்கு பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கினார்

  பின்னர் விழாவில் காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் பேசுகையில் சீருடை அணிந்த நீங்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் தனி மனித ஒழுக்கமாகவும் சுய ஒழுக்கமாகவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் பாதுகாப்பு பணி அசம்பாவித பணிகள் தடுக்க நீங்கள் அமர்த்தபடும் போது பொதுமக்களுடன் இருக்க வேண்டிய சூழ்நிலையின் போது நீங்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும்.

  சக காவலர்களுடன் நட்புடன் பழக வேண்டும் 24 மணி நேர பணி காவலர்கள் பணி இருந்தாலும் குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க வேண்டும் காவல்துறை என்பதை நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று பேசினார்