வேலூரில் கேளோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை அருகிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேளோ இந்தியா குறித்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடந்தது.
ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இவ்விழாவில் வேலூர் மேயர் சுஜாதா விளையாட்டு அலுவலர் நொய்லின் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் உடல் நலன் மற்றும் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோட்டையிலிருந்து துவங்கிய இந்த மாராத்தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.