துணைவேந்தர் நியமனகுழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

துணைவேந்தர் நியமனகுழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது துணைவேந்தர் நியமனகுழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது* நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

 வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வை துவக்கினார்.

  பின்னர் காட்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கினார். அமைச்சர் துரைமுருகன் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் அமுலு,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பின்னர் காட்பாடி பாரஸ் மஹாலில் வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கையும் அமைச்சர் துரைமுருகன் துவங்கினார்

  தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஒரு சிலர் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோ£ ¢பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தப் போராட்டம் பிசுபிசுத்தது என்றும், துணை வேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது.

காவேரி மேலாண்மை வாரியத்தில் அழுத்தம் கொடுப்பீர்களா என கேட்டதற்கு அவர்களிடம் கூறத்தான் முடியும் அழுத்தம் எப்படி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்