சீன் போட்ட அய்யா கண்ணு!

சீன் போட்ட அய்யா கண்ணு!

 சுவாமிநாதன்,

   தலைநகரம் டெல்லியில் கடந்த 10 மாதங்களாக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறகோரி நடைபெறும் போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க  மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆதரவு அளிக்கிறாராம்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/N2bcvIE9A5U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

 ஆகவே அவரது தலைமையில் சில பெருசுகள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை  27.09.2021 திங்கள் கிழமை  காலை 8 மணியளவில் மறிப்பதாக போலிசாருக்கு அவர்களே தகவல் கொடுத்துவிட்டனர்.

 திருச்சி ஒய்யாமாரி சுடுகாடு அருகில் காவிரி ரயில்வே பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் பத்திரமாக அழைத்துச்சென்று உறையூர் காவிரி திருமண மண்டபத்தில் அமரவைத்து கவனித்தனர்.