சிலம்பு போட்டியை சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் சேர்க்க கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் சிலம்பு போட்டியை சேர்ப்பதற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - சிலம்பாட்ட கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் போட்டியை துவங்கி வைத்து பேட்டி.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தனியார் பள்ளியில் 12-வது தேசிய சிலம்ப போட்டி துவங்கியது.
இந்த போட்டியை இந்திய சிலம்ப கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களை சேர்ந்த 400 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டி சீனியர், சூப்பர் சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் என நான்கு பிரிவுகளாக நடைபெறுகின்றன.
போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த போட்டியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய சிலம்பாட்ட கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், சிலம்பாட்ட கலைக்கு மத்திய மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மத்திய அரசின் கேளுவித்ய பிரிவில் சிலம்பப் போட்டியை இணைந்ததால் இந்தப் போட்டிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மத்திய அரசு கேளு வித்தியா திட்டத்தில் இனைத்ததால் ஆண்டு ஒன்றுக்கு 50 சிலம்பு போட்டி வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் ஆறு ஆண்டுகள் இந்த போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசின் மூலம் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தில் சிலம்பு போட்டியை சேர்ப்பதற்கு சிலம்பு கூட்டமைப்பு முயற்சி எடுத்து வருகிறது.
தமிழக அரசு இதற்கு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து. இந்தப் போட்டியை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உலக நாடுகள் அளவில் பிரபலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாரம்பரியம் மிக்க சிலம்பப் போட்டி அங்கீகாரம் அளித்த மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.