காவல் செய்தி மடல்:-வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக வெளியீடு! டிஐஜி, எஸ்பி பங்கேற்றனர்!

ம.பா.கெஜராஜ்,
காவலர்களின் சிறப்பு செய்திகள் குறித்து காவல் செய்தி மடல் ( மாதம்/காலாண்டு) சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற பெருநகர காவல் ஆணையரங்களில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களின்
நற்செயல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் செய்தி மடல் வெளியிடப்பட்டது. இந்த மடலுக்கு மாவட்ட காவல் கண்காணீப்பாளார் எஸ்.ராஜேஷ்கண்ணா ஆசிரியர் ஆவார்.
அப்படியிருக்க காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியினால் கடந்த ஆண்டு அக்டோபர்-22 முதல் டிசம்பர்-22 வரை காவலர்களின் சிறப்புகள் குறித்து காவல் செய்தி மடல்-1 தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் மேற்படி செய்தி மடல் வெளியிடப்பட்டது.
அதன் முன் பக்கத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆசிரியர் S.ராஜேஷ்கண்ணா அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்துரை .....
வேலூர் மாவட்ட காவல்துறையின் நற்செயல்களை வேலூர் மாவட்ட காவல் செய்தி மடலின் வாயிலாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பிற அரசுத்துறை ஊழியர்களை காட்டிலும் கூடுதல் பணி பொறுப்பு உண்டு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
காவல் பணி உயர்வானது மட்டுமல்லாமல் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய மகத்தான பணியாகும்.
"காவல்துறை ஒரு கடினமான துறை. இங்கே வெற்றிகள் எண்ணப்படுவதில்லை தோல்விகள் பூதாகரமாக்கிக் காட்டப்படும்'
பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பொங்கல் பண்டிகை நெருங்குகின்றது. புத்தாடைகள்,ஆபரணங்கள் போன்ற பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களை திசை திருப்பி உங்களுக்கு உதவுவது போல் நடித்து யாரேனும் உங்களிடம் உள்ள பணம் மற்றும் உடைமைகளை திருடிச் செல்ல நேரிடும். ஆகவே மக்கள் விழிப்புடன் இருக்கவும்.
இதுபோன்ற நேரங்களில் மக்கள் தங்களது மகிழ்ச்சிக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காற்றில் பறக்க விடக்கூடும். இதற்கு வாய்ப்பளிக்காத வகையில் விழிப்புடன் "வருமுன் காப்பதே சாலச் சிறந்தது" என்ற பழமொழிக்கேற்ப காவலர்கள் அனைவரும் குற்றங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் பணியாற்ற வேண்டும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.