வெள்ளத்தில் காணாமல் போன வீடுகளுக்கு மாற்று:- வேலூர் ஆட்சியர் விசிட்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பலகுடியிருப்புகள் காணாமல் போனது.
அந்த வகையில், வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் 24 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
இது குறித்து ஆய்வு நடத்திய வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் உடனடியாக 24 வீடுகளை கட்டி கொடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் தற்போது மேற்படி கிராமத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதையொட்டி ஆட்சித்தலைவர், அலுவலர்களுடன் சென்று பணிகளை பார்வையிட்டார்.