ஆண் அழகர் இன்ஸ்பெக்டருக்கு ஐ.பி.எஸ். அலுவலர்கள் பாராட்டு!

ஆண் அழகர் இன்ஸ்பெக்டருக்கு ஐ.பி.எஸ். அலுவலர்கள் பாராட்டு!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு, டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

 கடந்த 19.12.2021 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு தேர்வு செய்யபட்டார்.

 அதன் பின்னர் மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி அரங்கத்தில் 02.01.2022 அன்று நடைபெற்றது.

 இதில் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 7 நபர்களையும் பின்னுக்குத்தள்ளி குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

  இந்நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் அவர்கள் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின் குமார் அபிநபு இ.கா.ப. அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இ.கா.ப அவர்களையும்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

  முதலிடம் பிடித்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு காவல்துறை துணை தலைவர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.