சென்னை ரேஷன் கடைகளை கொத்தாக பிடித்த அலுவலர்கள்!

ஆர்.ராஜேஷ்குமார்,
ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்ளை பயோ மெட்ரிக் முறையில் வழங்கமால் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியிருக்கிறது.
அதாவது ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள் கையாடல் செய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர்,வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர், மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ள இந்த ரெய்டு மாநிலம் முழுக்க நடத்தப்பட்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்.