வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி! உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வுகள்!

வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி! உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வுகள்!

கு.அசோக்,

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர்கள்   மலைகிராமங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.

வேலூர் மாவட்டம்,

 வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை கிராமங்களான முத்துக்குமரன் மலை குண்டுராணி பீஞ்சமந்தை ஆகிய மலை கிராமங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்பு லெட்சுமி மேற்கொண்டார்.

  முத்துக்குமரன் மலையில் கால்நடை மருத்துவமுகாமை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

 பின்னர் ஜார்தான் கொல்லை நியாயவிலைக்கடையையும் ஆட்சியர் ஆய்வு செய்து பொருட்கள் வழங்கபடுகிறதா என மக்களிடம் கேட்டறிந்தார்.

 அதன் பின்னர் ஜார்தான் கொல்லையில் அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,அரசு துணை சுகாதார நிலையம் ஆகியவைகளை ஆட்சியர் ஆய்வு பின்னர் குண்டுராணி கிராமத்தில் ஆதிதிராவிடர் உண்டு உறைவிட பள்ளியையும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார்.

  இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குண்டுராணி கிராம மக்கள் சாலை வசதியும் பீஞ்சமந்தை கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி, தொழிற் துவங்க கடன் வசதி, பால் உற்பத்தி கொள் முதலை உயர்த்தவும் கோரிக்கை வைத்தனர்.

  மலை கிராம மாணவர்களுக்கு உணவுகளை தரமாக சமைத்து தரவும், மலைகிராம மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென ஆட்சியர்  உற்சாகப்படுத்தினார்.

  மக்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

அவருடன் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இராணிப்பேட்டை,

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்குட்பட்ட ஒழுகூர், தலங்கை, கரடி குப்பம் , கோவிந்தச்சேரி, கோவிந்தச்சேரிக்குப்பம், பானாவரம் இந்த பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார்.

   அப்போது பொது மக்களின் அடிப்படை வசதிக்கான சாலை, குடிநீர், சுகாதாரம்,மின்விளக்கு குறித்து குறைகளை பொதுமக்களும் கேட்டறிந்தார்.

   கலைஞர் கனவு இல்லம் கட்டுமானங்களை பார்வையிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஆய்வு செய்தார்.

   அப்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் குறித்த பதிவுகள், வேளாண்மைக்கு தேவையான உரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  உர மூட்டைகள் இருப்பு குறித்து கேட்டு அறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள், மகப்பேறு குறித்த பதிவேடுகளையும், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

   மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரத்தை ஆய்வு செய்து, அரிசி முட்டை இருப்புகளை கேட்டறிந்தார். அப்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஜெயசுதா, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி மற்றும் பிற துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.