தகவல் தொடர்பு இல்லாமல் கடல் ஆய்வுகளை செய்கிறோம்!பட்டமளிப்பு விழாவில் கடற்சார் இயக்குநர் பேச்சு!

தகவல் தொடர்பு இல்லாமல் கடல் ஆய்வுகளை செய்கிறோம்!பட்டமளிப்பு விழாவில் கடற்சார் இயக்குநர் பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

வேலூரில் திருவள்ளூவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 325 மாணவர்களுக்கு பட்டங்களை நேரடியாக வழங்கினார் - பிரதமர் அறிவித்த சமுத்திரயான் திட்டமான 6 ஆயிரம் மீட்டருக்கு கீழ் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் ஆய்வுகளை செய்கிறோம்  - தேசிய கடற்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ராமதாஸ் பேச்சு.

  வேலூர்மாவட்டம்,. வேலூர் சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான் ஆர்,என்,ரவி தலைமையில் நடைபெற்றது.

 இதில் தேசிய கடற்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ராமதாஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் 249 முனைவர் பட்டங்களும் மற்றும் இளங்கலை முதுகலை பாடப்பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற 325 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

  இவ்விழாவில் தேசிய கடற்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ராமதாஸ் பேசுகையில், இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் பட்டங்கள் பெறுகின்றனா.¢ ஆனால் சீனாவில் 1 கோடிக்கு மேலானோர் பட்டங்களை பெறுகின்றனர்.

  புதிய கல்வி கொள்கையான இந்திய அரசின் கல்வி கொள்கையால், புதிய நுட்பங்கள் வளர்ச்சி ஆராய்ச்சி ஆகியவைகள் மேம்படும்.  தேசிய கடற்சார் பல்கலைக்கழகம் புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். கடல் வளங்களை பெருக்க பிரதமர் அறிவித்த சமுத்திரயான் திட்டமான 6 ஆயிரம் மீட்டருக்கு கீழ் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்.

  எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் ஆய்வுகளை செய்கிறோம், இது போன்ற நீள பொருளாதார மேம்பாடு திட்டங்களை செய்து வருகிறோம். கடலில் நமது கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது, நீங்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த குடிமகனாக விளங்க வேண்டும் அப்போது தான் பாரத நாட்டிற்கு பெருமை நமது கடமை நாட்டை மேம்படுத்துவது தான்  என்று பேசினார்.