ஊட்டி மெக்கன்ஸ் கல்லூரியின் 8 - வது பட்டமளிப்பு விழா! வேந்தர் கி.வீரமணி பங்கேற்று பட்டம் வழங்கினார்!தொழில்துறை வல்லுனர்ககள் மாணவர்களுடன் கலந்துரையாடல்!!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடக்கலைக் கல்லூரியின் 8 வது பட்டமளிப்பு விழாவில் 88 மாணவர்களுக்கு வேந்தர் கி.வீரமணி பட்டம் வழங்கினார்.
ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் பேரார் பகுதியில் அமைந்துள்ளது மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடக்கலைக் கல்லூரி.
இங்கு 2015 - 2020 கல்வி கல்லூரி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கான எட்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஊட்டியிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் திராவிடக் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆசிரியர்.கி.வீரமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 88 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மாணவர்களின் எதிர்காலம் சிறப்புற அறிவுரைகள் வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
முன்னதாக கல்லூரியின் தலைவர் என்.முரளிக்குமரன் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியும் கவுன்சில் ஆப் ஆர்க்கி டெக்ச்சரின் அங்கீகாரமும் பெற்ற மெக்கன்ஸ் கட்டிடக் கலைக் கல்லூரியில் பயின்ற 88 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரியின் கல்வித்தலைவர் ஜி.செல்வகுமார் வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களை வரவேற்றார்.
விழாவில் கௌரவ விருந்தினராக பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ . கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
முதல்வர் பேராசிரியர் என்.எஸ். சரவணன் கல்வியாண்டின் கடந்தக் ஆண்டறிக்கை வாசித்தார். இறுதி ஆண்டு ஆய்வுக்கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 படைப்புகளுக்கு ஜேஸ்.எண்டோவ் மென்ட் நிதியின் சார்பாகக் காசோலை வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற தொழில்துறை வல்லுனர் குழுவுடன் கலந்துரையாடல், மாணவர்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் அவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவும் அமைந்தது.
விழாவில் பல்வேறு நிறுவனங்களின் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் துறைத் தலைவர் எஸ்.கே.சரண்யா நன்றி கூறினார். விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.