நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி! சேர்மன் ஜி.வி.சம்பத் தகவல்!

நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி! சேர்மன் ஜி.வி.சம்பத் தகவல்!

மிகுஒளியான்,

 வேலூர் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்(Organ Transsplantation centre) தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும் (தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்)  அம் மருத்துவமனைதின் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் நறுவீ மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

  மிகச்சிறந்த மருந்துவர்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு கொண்டு இயங்கி வரும் நறுவீ மருத்துவமனையின் புதிய சிறப்பு அம்சமாக இருதயம், நுரையீரல்,கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உடல் உறப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 பொது மக்கள் யாரேனும் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அவர்கள் அரசின் விதிப்படி முறையாக விவணப்பித்து இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

  மருத்துவமனை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே உடல் உறுப்புகள் மாற்று அறுவை அனுமதியை இம்மருத்துவமனை பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது மட்டுமின்றி பெருமை கொள்ளதக்கதாகும்.

 மேலும், பிரபல தனியார் நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் நறுவீ மருத்துவமனை தென் இந்தியாவின் வளரும் மருத்துவமனைகளில் முதன்மையாகவும் , சென்னை மண்டலத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

 இந்த சாதனை நறுவீ மருந்துவமனையின் இன்னொரு மைல்கல் என்று மருத்துவமனை தலைவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் இதுவரையிலும் சுமார் முப்பதாயிரம் நோயாளிகள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் சுமார் ஆராயிரம் பேர் சிகிச்சை பெற்று சென்றனர்.

 குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, அருணாசலபிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் மற்றும் வங்காளதேச நாட்டிலிருந்தும் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனார்.

 மேலும் சூடான் நாட்டில் நறுவீ மருத்துவமனையின் தொடர்பு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த நாட்டில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக கொரோனா காலம் முடிந்தவுடன் இம்மருத்துவமனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

 தற்போது நறுவீ மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை அதிக அளவில் நடைப்பெற்று வருவதுடன், இருதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, நரம்பியில் அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 குறிப்பாக, வங்காளதேச நாட்டை சேர்ந்த 19 வயது நபர் ஒருவருக்கு முதுகு தண்டில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் அவர் நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாத நிலையில் ஏற்ப்பட்டு இரண்டு, மூன்று பொரிய மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றும் தீர்க்க முடியாத நிலையில் இம்மருத்துவமனைக்கு வந்து, இங்கு அவருக்கு அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலமாக அவர் பூரண குணமடைந்து திரும்பினார்.

  இவ்வாறு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பேட்டியில் குறிப்பிட்டார்.

  பேட்டியின் போது நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.