பெண் காவலர்களின் கணவர்களுக்கு வேலை வாய்ப்பு! டிஐஜி துவக்கிவைத்தார்!

பெண் காவலர்களின் கணவர்களுக்கு வேலை வாய்ப்பு! டிஐஜி துவக்கிவைத்தார்!

   ஜி.கே.சேகரன்,

  காவலர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை வேலூர் சரக டி.ஐ.ஜி.யான ஏ.ஜி.பாபு இ.கா.ப.அவர்கள் துவங்கி வைத்தார். தமிழகத்திலேயே  முதன்முறை இப்படி தேர்வு நடக்கும் நிலையில், இதில் எட்டு மாவட்ட பயணாளிகள் கலந்துக் கொண்டனர்.

   இது குறித்த விவரம் வருமாறு,

 வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடியில், வடக்கு மண்டல காவல்துறையின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

 இந்த முகாமில், வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த காவலர்களின் மகன் மற்றும் மகள்கள், மேலும் அமைச்சுபணியாளர்களின் மனைவிகள் மற்றும் பெண் காவலர்களின் கணவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 இதில் 25 நிறுவனங்கள் ஆளெடுப்பு நடத்த வந்திருந்தார்கள்.

  எட்டு மாவட்டங்களிலிருந்து ஆயிரம் பேர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  இம்முகாம் நாளையும் நடைபெற உள்ளதுஸ்.

  தமிழகத்தில் முதல் முறையாக காவலர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை வேலூர்,திருச்சி,மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் இது நடத்தப்படுகிறது.

   பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்  அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் விரும்பும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.