உங்கள் மாடுகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! ஜனவரி 5 ஆம் தேதி வரை கோமாரிதடுப்பு முகாம்!

உங்கள் மாடுகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! ஜனவரி 5 ஆம் தேதி வரை கோமாரிதடுப்பு முகாம்!

  கு.அசோக்,

 வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

 அந்த வகையில் வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்

  கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன்,கால்நடை இணை இயக்குநர்மருத்துவர் அந்துவன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

 இதில் திரளான பசுக்கள் மற்றும் காளைகளுக்கு கோமாரி தடுப்பூசிகள் போடப்பட்டது.  இந்த  தடுப்பு முகாமான து 15 ஆம் தேதி துவங்கி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வரையில் 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடக்கிறது. இதன் மூலம் மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 172000 கால்நடைகள் பாதுகாக்கபடும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்குவதற்காக மூஞ்சூர்பட்டு மலை பகுதியில் இடத்தினை ஆய்வு செய்தா£.¢

 இராணிப்பேட்டைமாவட்டம்,

 வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் தேசிய கோமாரி தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்

 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா வாலாஜாபேட்டை அடுத்த வள்ளுவம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோமாரி தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கால்நடைகளுக்கு தேவையான மருத்து, தீவனங்களை கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

  கோமாரி நோயால் கால்நடைகள் உயிரிழப்பு, பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற விவசாயிகளுக்கு  ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

  எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2 லட்சத்து 3 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல்போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம் கோயில் வட்டம் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுபடுத்தும் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான 6 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.

  இந்த சிறப்பு கால்நடை  முகாமில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுடன் வந்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.

 அதனை தொடர்ந்து  மழை மற்றும் பனிக்காலங்களில், கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனக்களையும், தாது உப்பு, மற்றும் இதர புரதசத்துக்களையும்   கால்நடைத்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.