விண்வெளி விஞ்ஞானி வீரமுத்துவேல்க்கு எஸ்.ஆர்.எம் பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம்! வேந்தர் வழங்கினார்.!

விண்வெளி விஞ்ஞானி வீரமுத்துவேல்க்கு எஸ்.ஆர்.எம் பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம்! வேந்தர் வழங்கினார்.!

பா. சுரேஷ்

 எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யூனாணி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர்,பத்மஸ்ரீ விருது பெற்ற  வைத்தியா ராஜேஷ் கோட்சாவிற்கும், நிலவில் சந்திராயன்-3 என்ற செயற்கை கோளை நிலை நிறுத்தியதில் சாதனை படைத்த அந்த திட்டத்தின் இயக்குனர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர் பி. வீரமுத்துவேல் ஆகியோருக்கு கௌர்வ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.  இதில்  உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.

 தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் முனைவர் பா.சத்தியநாராயணன் வரவேற்று பேசுகையில் :

   விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.இந்திய தேசிய மருத்துவ ஆணையகத்திற்கு  உலக மருத்துவ கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது, இதன் மூலம் இந்திய மருத்துவர்கள் 10 ஆண்டுகளுக்கு உலக முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் சமுதாய வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை வழங்கவேண்டும் என்றார்.

  விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெரும் விண்வெளி விஞ்ஞானி வீரமுத்துவேல் உலக அளவில் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சந்திராயன் 3 திட்ட  செயற்கை கோளை நிலவில் நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளார். அதேபோன்று கௌரவ டாக்டர் பட்டம் பெரும் ஆயுஷ் அமைச்சக செயலர் பத்மஸ்ரீ  வைத்தியா ராஜேஷ் கோட்சா நாட்டில் இந்திய மருத்துவ முறையினை பிரபலப்படுத்தும் திட்டத்தினை சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

 விழாவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.செந்தமிழ்செல்வன் நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

 

பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து, பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர்க்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி அவர்களை கௌரவித்தார்.மேலும்  மாணவ, மாணவியர் 8513 பேருக்கு பட்டங்களையும் பல்கலை தேர்வில் ரேங்க் பெற்ற 241 பேருக்கு பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.

 நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகங்களின்  தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார்,எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி, இணை துணைவேந்தர் மருத்துவம் டாக்டர் எ. ரவிக்குமார், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, ஊடக பிரிவு இயக்குநர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.