24 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஆறு மாடி ஆஸ்பத்திரியை அமைச்சர் ஆய்வு!

கு.அசோக்,
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணி ஆய்வு செய்தார் - புதியவகை கொரோனா 20-க்கும் குறைவான எண்னிக்கையிலேயே தமிழகத்தில் பாதிப்பு உள்ளது இணை நோய் உள்ளவர்கள் கர்பிணி தாய்மார்கள் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி ஆம்பூரில் பேட்டி.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள சிடி ஸ்கேன் ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 24 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆறு மாடி புதிய கட்டிடப் பணியை ஆய்வு மேற்கொண்டு தரமான கட்டிடத்தை கட்டுமாறு பொறியாளர்களிடம் ஆலோசனை வழங்கினார். இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரபாகரன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் புதிய வலகையிலான கொரோனா உலகம் முழுவதும் பரவல் உள்ளது. இந்தியாவிலும் கேரளா போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் 20-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனா.¢ இந்த பாதிப்பு 3 நான்கு நாட்கள் மட்டும் இருக்கும். மக்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குணப்படுத்தி கொள்கின்றனா.
இருப்பினும் கர்பிணிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையை பெற வேண்டும். இன்றைக்கு அரசு மருத்துவமனைகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தோம். அனைக்கட்டு மருத்துவமனை மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆய்வு செய்தோம் ஆம்பூர் மருத்துவமனை புற நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உள்ளது. சி.டி.ஸ் கேன் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகியவைகளுடன் சிறப்பாக ஆம்பூர் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு கட்டமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தீவிர சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 56 கோடியில் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு கோடியில் பொதுசுகாதார ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செய்துள்ளோம். இங்கு அதிக பட்ச வசதிகளை ஏற்படுத்த ஆம்பூரில் ரூபாய் 24 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் சிக்கனாங்குப்பம் காமராஜபுரம் கூடப்பட்டு புதூர் நாடு தாமலேரிமுத்தூர் கொடைக்கல்நத்தம் ஆலாங்குப்பம், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் புதிய துணை சுகாதார நிலையங்கள் கட்டிடம் கட்டும் பணிகளும் நடக்கிறது அதிக பட்சமாக கட்டிடம் கட்டும் பணிகள் இம்மாவட்டத்தில் நடக்கிறது என்று சொன்னார்.