அனைத்து வழிபாட்டுத் தலங்களை முழுமையாக திறக்கலாம்! அரசு அறிவிப்பு! ஊரடங்கு ரிலாக்ஸ்!!

அனைத்து வழிபாட்டுத் தலங்களை முழுமையாக திறக்கலாம்! அரசு அறிவிப்பு! ஊரடங்கு ரிலாக்ஸ்!!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,

தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளின் கீழ் திறக்கப்படாமல் இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் ஊரடங் தளர்வுகள் சிலவும் அடங்கும்.

 மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், அதில் சில தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து நேற்று 13.10.2021 முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 அந்தக் கூட்டத்தில் நடந்த ஆலோசனைப்படி கீழ் கண்ட தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

  1. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வாரத்தில் எல்லா நாட்களிலும் திறக்கலாம்.
  2. பண்டிகைக் சீசனை முன்னிட்டு அனைத்து கடைகள், உணவகங்கள், பேக்கரி போன்றவை இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  3. தனிப்பயிற்சி நிலையங்கள், தனியார், அரசு வேலை வாய்ப்பு முகாம்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

        

    குறிப்பாக நவம்பர் 1ஆம் தேதி முதல்  மாவட்ட நிர்வாகங்கள் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளை உரிய வழிமுறைகளுடன் நடத்தலாம்.

 மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவை முழுமையாக செயல்படலாம். ஆனால் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும் இறப்புகளில் 50 பேரும் பங்கேற்கலாம்.

திருவிழாக்கள், அரசியல், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

 இந்நிலையில் மேற்கண்டவைத் தவிர, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் எனவும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.