நடக்கவே முடியலை துப்பாகியை எங்கு தூக்குவது!

ம.பா.கெஜராஜ்,
நடக்கவே முடியலை இதுல துப்பாகியை எங்கு தூக்குவது என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு பெண் காவலர் எழுதியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதன் விவரம் வருமாறு,
காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் போது தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று காவல் உயர் அலுவலர் வாய் மொழி உத்தரவு போட்டுள்ளார். இதற்கு முன்னாள் பெண் காவலர் செல்வி ராணி என்பவர் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருடனை கண்கானிப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கடினம் துப்பாக்கியை பாதுகாப்பது.
ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் வயதானவர்கள் தான் அதிகம்.
அவர்கள் நடந்து போவதே கடினம் இதில் துப்பாக்கி எங்கருந்து தூக்கிக்கிட்டு நடக்கறது? அதிகாரிகள் கட்டளை இடுவது சுலபம்.
இப்ப நிறைய காவலர்கள் சுகர் பிரசர் மாத்திரை இல்லாம உயிர்வாழவே முடியாத நிலையில இருக்காங்க. மாத்திரைய போட்டா அதுவே மயக்கம் வரும் ,இதுல எங்க துப்பாக்கிய தூக்கிக்கிட்டு போறது?
துப்பாக்கிங்கறது விளையாட்டுப் பொருள் இல்ல . ஒரு பெண் குழந்தைக்கு குடுக்கவேண்டிய பாதுகாப்பைவிட அதிகமா பாதுகாக்கனும். கொஞ்சம் அசந்தா கூலிப்படையில உள்ளவனுங்க துப்பாக்கிய புடுங்கி சுட்டுப்போட்டுட்டு துப்பாக்கியவும் தூக்கிட்டு போய்டுவானுங்க.
என்று அதில் வரிகள் செல்கின்றன.
இப்படி சுகர், பிபி, வயதானவர்கள், என்று சாக்கு போக்கு சொல்பவர்கள் டிபார்ட் மென்டுக்கு பாரம் தானே? ஆகவே உயர் அலுவர்களின் உத்தரவை பின்பற்றுவதே நலம் அல்லவா?