போலிசாருக்கு மானியக் கோரிக்கை விவாதம் பலனளிக்குமா?

போலிசாருக்கு மானியக் கோரிக்கை விவாதம் பலனளிக்குமா?

  ம.பா.கெஜராஜ்,

  வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது, காவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழக சட்டப்பேரவையில், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

 இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சி.சைலேந்திரபாபு,இ.கா.ப., காவலர்களுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதன்படி தமிழகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருநாள் வார விடுப்பால் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர்? எத்தனை பேர் இதில் விடுமுறையை முறையாக பயன்படுத்தி உள்ளனர்? எத்தனை பேர் விடுமுறை எடுத்துள்ளனர் என்பதை குறிப்பெடுத்து, அதை தலையமையகத்திற்கு அனுப்பும்படி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து தலைமையகத்திற்கு உடனே மெயில் அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 மேலும், உங்கள் துறையில் முதல்வரின் திட்டத்தின்படி காவல் துறையிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் எந்தெந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு உள்ளது தொடர்பாகவும் ரிப்போர்ட் தயார் செய்து, அதை விரைவில் தலைமையகத்திற்கு அனுப்புமாறு, டிஜிபி  உத்தரவிட்டுள்ளார்.

ஆக போலிசாருக்கு ஏதோ ஒரு இன்ப அதிர்ச்சி வரலாம்.