விழாக்களில் குத்தாட்டம், ஆபாச நடனம் ஆடும் ஆந்திர கர்நாடக குழுவினர்! பரபரப்பு குற்றச்சாட்டு!

விழாக்களில் குத்தாட்டம், ஆபாச நடனம் ஆடும் ஆந்திர கர்நாடக குழுவினர்! பரபரப்பு குற்றச்சாட்டு!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 தமிழ்நாட்டில் விழாக்களில் குத்தாட்டம்,  ஆபாச நடனம் ஆடுபவர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் என்று நடன கலைஞர்கள் சங்கம் குற்றம் சாட்டினர்.

   ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் பங்கேற்பு.

  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் பாஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

  திருவிழாவில் மேடை நடன கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்தந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ஒரு சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி காவல்துறை மறுக்கப்படுவதாலும், இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு காரணமாகவும் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மேடை நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 10 மணிக்கு மேடை நடன நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதால், நிகழ்ச்சி நடத்தும் விழா கமிட்டியர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

 இதனால் மேடை நடன நிகழ்ச்சியை இரவு 12 மணி வரை நடத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.

 ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்து வந்த நிலையில் இது போன்ற கட்டுப்பாடுகளால் தற்போது நிகழ்ச்சிகள் குறைந்து மிகவும் சிரமத்தில் உள்ளோம்.

 தமிழகத்தைச் சேர்ந்த பெண் கலைஞர்கள் ஆபாச நடனம் ஆடுவதில்லை, ஆபாச நடனம் ஆடுபவர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

 ஆபாச நடனம் ஆடுபவர்கள் குறித்து காவல் நிலையத்தில் எங்கள் சங்கம் சார்பில் அளிக்கப்படும் புகார்கள் ஏற்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பரிதாபமாக.