சப்டிவிஷன் அதிகாரியால் போதை ஆசாமிகளிடம் உதைப்படும் போலிசார்!

சப்டிவிஷன் அதிகாரியால் போதை ஆசாமிகளிடம் உதைப்படும் போலிசார்!

  ஜி.கே.சேகரன்

  ஜோலார்பேட்டை அருகே நாட்டியாலயா நிகழ்ச்சியில் குத்துப்பாட்டை ஒன்ஸ்மோர் போட சொல்லி  போலீஸ் சட்டையை கிழித்த போதை ஆசாமி கைது. நாட்டியாலயாவில் தொடர்ந்து போலீசார் தாக்கப்படும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவிழா என்று வந்துவிட்டால் நாட்டியாலயா நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது. இத்தனைக்கும் நாட்டியாலயா நடைபெறும் போதெல்லாம் கண்டிப்பாக சண்டை சச்சரவு ஏற்படும். சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும்.

 இருந்தாலும் கூட பொதுமக்கள் நாட்டியாலயா மீது பிரியம் கொண்டுள்ளனர்.

 இதனால் நாட்டியாலயா நிகழ்ச்சியின் போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆனாலும் கூட வேடிக்கை பார்க்கும் நபர்கள் குடிபோதையில் நடனம் ஆடுவதால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது.

 இந்நிலையில் கடந்த வாரம் குரிசிலாப்பட்டு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி டடைபெற்றது. அப்போது போதையில் நடனமாடிக் கொண்டிருந்த சிவசங்கர் என்பவரை தட்டிக்கேட்ட அவர் போலீசாரை அடித்தாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு சில போலீசாரின் அழுத்தத்தின் காரணமாக சிவசங்கர் மீது போலிஸ்  புகார் கொடுக்காமல் சென்றார்.

 அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் மாரியம்மன் திருவிழாவின் போது நடன நாட்டியாலயா நடைபெற்றுள்ளது. அப்போது ஜோலார்பேட்டை போலீசார் 10 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

  நாட்டியாலயா நிகழ்ச்சி நடந்து முடிந்த தருவாயில் கோவிந்தராஜ் (40) என்பவர் பாட்டை மீண்டும் ஒன்ஸ்மோர் போடுங்க என்று போதையில் அலப்பறை செய்துள்ளார்.

  நடன நிகழ்ச்சி மூன்று மணி நேரம் மட்டுமே நடக்க வேண்டும் என்று நேரம் குறிப்பிட்டுள்ள நிலையில், அந்த நேரத்தை கடந்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று போலீசார் தடுத்துள்ளனர். இதனால் போதையா சாமிக்கும் போலீசா இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  அப்போது கடுமையான போதையில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் காவல்துறையை சேர்ந்த கணேஷின் சட்டையை கிழித்துள்ளார். இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திரியாலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நடன நாட்டியாலயா நிகழ்ச்சியில் போதை ஆசாமி போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

 இந்த சப்டிவிஷனின் அதிகாரியாக இருப்பவர் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுவதால் காவல் துறை அதிகாரிகள் போதை ஆசாமிகளிடம் உதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று த்ரிஸ்டார் காக்கிகள் கதறுகின்றனர்.

  நாட்டியாலயா நிகழ்சிக்கு நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு ஒன்றைக்கூட கடைபிடிக்காமல் அரை குறை நடனமாட அனுமதிப்பதற்காக ரொக்கமாக பணம் பெறுகிறார். அதற்காக தமக்கு கீழ் பணியாற்றும் போலிசாரை பகடைகாயாக பயன்படுத்துகிறார் இந்த சப்டிவிஷன் அதிகாரி.

 இவர் ஏற்கனவே கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தலைமைக் காவரை முன்வைத்து எட்டு லட்சம் ரூபாயை கொள்ளைக்காரர் தரப்பில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தலைமைக் காவலருக்கு அய்யா ஒரு ரூபாய் கூட தரவில்லையாம்.

  இதனால் அந்த தலைமைக்காவலர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று மாவட்ட அளவில் சிறப்பு திரிஸ்டார் பதவி வகித்த நடிப்பு புகழ் அதிகாரி பலரிடம் போட்டுக் கொடுத்து வருகிறாராம்.

பாவம் போலிசார்.