சூப்பராக பணியாற்றிய பேரூராட்சி! கொடியேற்றத்துடன் துவங்கிய வேளாங்கண்ணி மாதா திருவிழா!

வே.இளங்கோ.

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.

    இந்த பேராலய கொடியேற்றத்தை காண அயல்நாடுகள், மற்றும் கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் சென்னை உட்பட    பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு திரண்டனர்.

இந்நிலையில்  பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  பேராலய அதிபர் இருதயராஜ் திருப்பணிக்காக நிர்வாகத்தோடு இணைந்து பேரூராட்சி தலைவி மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பணிகளை கண்காணித்தனர்.

 பக்தர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை தீயணைப்பு துறையினர் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த ஆண்டு குறிப்பாக 10 லட்சம் பேர்  வந்து கலந்து கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் நேற்ற் உ 5-40 மணிக்கு பேராலயத்திலிருந்துகொடி எடுக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டு 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது . வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக இடையூறு இல்லாமல் முன்கூட்டியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாதைகள்  சரி செய்யப்பட்டுள்ளது வேளாங்கண்ணி பேரூராட்சி  சிறப்பாக செயல்பட்டு இடையூறுகள் அகற்றப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.