மனிதநேய ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா!

ஜே.தே.பிரகாசம்,
வேலூர் சரக டிஐஜியாக சிறப்பாக பணியாற்றி வந்த முனைவர் திரு எம்.எஸ்முத்துசாமி அவர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், சக அலுவலர்கள் அவருக்கு பாராட்டு விழாவை நடத்தினர்.
வேலூர் ஆஃபீஸர்ஸ் லைனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி க்களும், வேலூர் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளும், காவல் ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
காவல்துறை தலைவரான முனைவர் திரு.முத்துசாமி ஐபிஎஸ் அவர்களின் பல்வேறு பணிகள் பாராட்டுதல்களுக்கு உட்பட்டதாகும். அவரது மனித நேய பணிகளே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அவற்றில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், இவர் வேலூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்ற பின்னர் தான் இப்படி ஒரு பவரான பதவி உள்ளது என்பதை மக்கள் அறிந்தனர்.
புகார்தாரர்களின் குறைகளை கவனமாக கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பலருக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கடமையாற்றிய பெயர் இவருக்கு உண்டு.
அதேபோல் சரகத்துக்கு உட்பட்ட காவல் அதிகாரிகள் எப்படி பணியாற்ற வேண்டும், அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் அதேபோல் அவர்களது பணிகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும் என்பதில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர்.
அதே போல் போக்சோ சட்டத்தில் பிடிபடுபவர்களை கொஞ்சமும் கருணை காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி பலருக்கு பாடம் போட்டு இருக்கிறார்.
மேலும் தவறு செய்யும் காவல் அதிகாரிகள் குறித்து அவரிடம் புகார் அளித்தால் அதை ரகசியமாக விசாரித்து அதில் குற்றங்கள் நிரூபணம் ஆனால் அதிகாரிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிருக்கிறார். ஆக இதுவரை வேலூர் சரகம் கண்டிராத ஒரு டி.ஐ.ஜி யை வேலூர் சரக மக்கள் பிரிய நேரிட்ட போதிலும், ஐஜி - யாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவரை பலரும் வாழ்த்துகிறார்கள்.
மனித நேயம் கொண்ட ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு லைவ் லுக் செய்தி நிறுவனம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.