திருப்பதிக்கு செல்லும் புறவழி சாலையை இணைக்க ரூ.100 கோடி! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

திருப்பதிக்கு செல்லும் புறவழி சாலையை இணைக்க ரூ.100 கோடி! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மழைக்காலம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட சாலையை செப்பணிடப்படும் - காட்பாடியிலிருந்து 7 கிலோமீட்டர் திருப்பதிக்கு செல்லும் புறவழி சாலையை இணைக்க ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுசாலை அமைக்கபடும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.

 வேலூர்மாவட்டம், அனைக்கட்டு அருகே கெங்கநல்லூரில் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு வரையிலும் அதே போல் ஆலங்காயம் முதல் திருப்பத்தூர் வரையில் இருவழி சாலையை 4 வழியாக சாலைகளாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

  இதற்கு தலா 8 கிலோமீட்டர் ரூ.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பணிகளை துவங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி,சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் திரளானோர் இதில் கலந்துகொண்டனர்

  பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் திராவிட மாடல் ஆட்சி என பெயரிட்டார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இலக்கு.

   தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்கள் பொருட்களை சந்தைப்படுத்த சாலை அவசியம் அரசின் மூலதனம் நெடுஞ்சாலைத்துறை அதற்கு முக்கியத்துவம் தந்து பல பணிகள் நடக்கிறது, அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 276 கிலோ மீட்டர் சாலையை விரிவுப்படுத்துவது உறுதிப்படுத்தும் அடிப்படையில் ரூ.475 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிதியாண்டில் சாலையை விரிவுப்படுத்த ரூ.130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே இருக்கும் சாலையை பராமரிப்பு விரிவுப்படுத்த இம்மாவட்டத்தில் 600 கோடி செலவு செய்துள்ளோம்.

   தமிழகத்தில் தரைப்பாலங்கள் 1281 அதனை உயர்மட்டபாலமாக உயர்த்தும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 மேம்பாலங்கள் அமைக்க செலவும் செய்யப்பட்டுள்ளது.

  நீண்ட நாள் கோரிக்கையான பொன்னை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது  காங்கேயநல்லூரிலும் பாலம் கட்டிகொண்டிருக்கிறோம் விரைவில் திறக்கவுள்ளோம்.

  இம்மாவட்டத்தில்  200 கோடி திட்டத்தில் ஐந்து மேம்பாலங்கள் அதில் மூன்று முடிந்து 2 ரயில்வே மேம்பால பணிகள் நடக்கிறது.

 முதல்வர் அறிவித்த திட்டத்தின் படி இருவழி சாலைகளை 4 வழி சாலைகளாக ஆக்குகிறோம் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 48 கோடியில் சாலை விரிவாக்கம் செய்துள்ளோம்.

   இன்று அப்துல்லாப்புரம் ஆசனாம்பட்டு வரையில் 50 கோடியில் 4 வழி  சாலையாக விரிவாக்கபடும் வேலூரில் புறவழி சாலை வேண்டுமென சட்டமன்றத்தில் பேசினார்கள்.

  அதற்கு முக்கியத்துவம் தந்து விழுப்புரம் சாலையுடன் லத்தேரியில் இணைப்பு சாலை போடப்படும். தென் பகுதியிலிருந்து  திருப்பதி செல்லும் ஆன்மிக பக்தர்களுக்காக அவர்கள் வேலூர் தாண்டி செல்லும் போது காட்பாடி வழியாக செல்ல வேண்டும் அதற்கு புறவழி சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர்.

  அதற்காக காட்பாடி சித்தூர் சாலையிலிருந்து  இராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி சாலையை சுற்றுசாலையாக  இணைக்க 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளோம்.

  சாலை என்பது நாட்டின் முதுகெலும்பு, பொருளாதார முதுகெலும்பு என்பதால் நெடுஞ்சாலைத்துறைக்கு  பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 அந்த அடிப்படையில் பணிகள் சிறப்பாக நடக்கிறது சாலையை விர்வாக்கம் செய்யும் போது ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை வைக்கிறோம்.

   சென்ற ஆண்டு 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டோம், இந்த ஆண்டும் முதல்வர் ஆணையை ஏற்று மரங்களை நடுவோம்.  நெடுஞ்சாலைத்துறை மரங்களை நடவும் முக்கியத்துவம் தருகிறோம்.

 பள்ளிகொண்டா புறவழி சாலை ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அந்த சாலையும் போடப்படும்.

 மத்திய அரசிடம் பல ஆயிரம் கோடி புயல் நிதி கேட்டு, கடிதம் எழுதினோம் வலியுறுத்தினோம் அவர்கள் கொடுக்கவில்லை.

  வருங்காலங்களில் புயல் வந்து சாலைகள் பழுதானால் மத்திய அரசிடம் கேட்போம். ஆனாலும் மாநில நிதியை வைத்து சாலைகளை செப்பனிடுவோம்.

  மழை முடிந்தவுடன் முதல்வர் பணம் ஒதுக்குவார் நாங்கள் சாலையை போடுவோம் ஏற்கனவே சென்ற ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலங்களை அறிவித்தனர் ஆனால் அவர்கள் அதற்காக சர்வீஸ் சாலைக்கு கூட நிலம் எடுக்கவில்லை.

 இப்போது திமுக ஆட்சியில் 36 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டது, மீதமுள்ளவைகளை கட்டிகொண்டிருக்கிறோம்.

  சாலை பராமரிப்பு வருடா வருடம் நடந்து வருகிறது அதற்கு நிதி ஒதுக்கப்படும்.

 வெளிப்படை தன்மையுடன் டெண்டர் விடுகிறோம் அதற்கு தனி அதிகாரியை போட்டு செலவு முறையாக நடக்கிறதா என்று ஆய்வு செய்கிறோம்,பணிகள் முறையாக நடக்கிறது.

 புதிய சுங்கச்சாவடி துவங்குவது குறித்து ஒன்றிய அரசு தான் சொல்ல வேண்டும் அது கூடாது என நான் பலமுறை கடிதம் எழுதிவிட்டேன் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்று சொன்னார்.