கத்தோலிக்க திருச்சபையின் அருளீக்கங்கள் கண்காட்சி! ஆயிரக்கணக்கானோர் பார்வை!!
ஜி.குலசேகரன்,
வேலூரில் கத்தோலிக்க திருச்சபையின் அருளீக்கங்கள் கண்காட்சி ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனா.¢
வேலூர்மாவட்டம்,வேலூரில் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் விண்ணேற்பு அன்னை பேராலய வளாகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர்களின் அருளிக்கங்கள் கண்காட்சி நேற்று முதல் 18 ஆம் தேதி வரையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் இக்கண்காட்சியானது நடைபெறும்.
இந்த அருளீக்கங்கள் என்பது புனிதர்களின் 1500 அருளீக்கங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
அதில் புனிதர்களின் தலைமுடி எலும்புகள் உடைகள் உடல் உறுப்புகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவைகள் புனிதகமாக கருதப்படுகிறது.
அவைகளை கண்காட்சியில் வைத்து அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவைகள் எடுத்து காட்டாக அமைய வேண்டுமெனவும் இந்த அருளீக்கங்கள் இறைவனை நினைவு கூறும் ஒன்றாக தான் இறைவனோடு ஒன்றினைய இது நடத்தபடுகிறது.
இந்த புனிதர்களின் பரிந்துரை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.
மேலும் புனிதர்களான அன்னை தெரேசா,டான்பாஸ்கோ,தேவ ஆசீர்வாதம்,உள்ளிட்ட 1500 புனிதர்களின் அருளீக்கங்கள் இக்கண்காட்சியில் வைக்கபட்டுள்ளது.
இறையின் மகிமையை உணருவதற்காக இது சமூகங்களிலும் நாட்டிலும் அமைதி நிலவிடவும் தூய்மை சுகம் பெறவும் பக்தியை நோக்கவும இக்கண்காட்சியை அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர்.
இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் எல்லா மதத்தினரும் இதனை கண்டுகளித்து வருகின்றனர் இது போன்று ஒவ்வொரு நாளும் கல்வி,சுகாதாரம் ,பொருளாதார மேம்பாடு இளைஞர்கள் நல்வழிப்படுத்துதல் பெண்கள் முன்னேற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடக்கவுள்ளது.
இது சாதி மத மொழி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து மதத்தினரும் இக்கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.
அனுமதி இலவசம்.

admin
