அலங்காநல்லூரில் சீறிப்பாய்ந்த காளைகள்! போட்டியை துவக்கிவைத்த துணை முதல்வர்! நின்றுக் கொண்டே இன்ஸ்ட்ரெக்ஷன்களை கொடுத்த கலெக்டர்!

அலங்காநல்லூரில் சீறிப்பாய்ந்த காளைகள்! போட்டியை துவக்கிவைத்த துணை முதல்வர்! நின்றுக் கொண்டே இன்ஸ்ட்ரெக்ஷன்களை கொடுத்த கலெக்டர்!

அ.கார்தீஸ்வரன்,

 உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களை தெறிக்கவிட்டது.

  அப்போது கோவில் களைகள் மற்று பொது காளைகள் முறைப்படி வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அவற்றுக்கு தங்க காசுகளை உதயநிதி வழங்கினார்.

 இந்நிலையில் களப்பணிகளில் பல்வேறு கோணல்கள் இருப்பதாக நேற்று முதல் இருந்த வந்த சலசலப்பானது போட்டி துவங்கியதுமே அந்த சர்ச்சை காணாமல் போனது.

  என்ன சர்ச்சை என்பதைப் பார்ப்போம்.

  கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும் மாட்டின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

   உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு அனுமதி தற்போது வரை கிடைக்காததால் பரிசுப் பொருட்கள் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இடத்தை சுற்றி நூற்றுக்கணக்கான உள்ளூர் மாட்டு உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

  ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை வாடிவாசல் முன்பு அமர்ந்து போராடுவதாக மாட்டின் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

   உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியின் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 இந்த போட்டிக்காக கடந்த மூன்றாம் தேதி முன்னேற்பாடு பணிகள் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அதே போல் முதல் சுற்று ஆரம்பிப்பதற்கு முன்பே 3 மாடுபிடி வீரர்கள்  உடல் எடை குறைவு காரணமாக உடல் தகுதி இல்லாததால் வெளியேற்றப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

  அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மாட்டின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் தென்னைநாற்று பரப்பும் பணியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது.

  பின்னர் ஒருவாறு சமாளிக்கப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

 போட்டி தொடங்கிய பின்னர் துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் அமர்ந்துக் கொண்டு காளைகளின் சீற்றத்தை பார்த்து கொண்டிருக்க, கலெக்டர் எம். எஸ்.சங்கீதா ஐ.ஏ.எஸ். மட்டும் நீண்ட நேரமாக நின்றுக் கொண்டே மைக் மூலம் இன்ஸ்ட்ரெக்ஷன்களை கொடுத்து கடமையாற்றிக் கொண்டிருந்தவர் அதன் பின்னரே இருக்கையில் அமர்ந்தார்.