போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா! குஷியோ குஷி!

எம்.ஏ.கண்ணன்,

காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து பகிர்ந்து உண்டு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காவல்துறையினர்.

 பண்டிகை காலங்கள் என்றாலே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆதலால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவது என்பது பெரும்பாலும் காவலர்களுக்கு முடியாத காரியமாக இருக்கும்.

   இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் பணி புரியும் அனைத்து காவலர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் தை திருநாள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

 ஆண் மற்றும் பெண் காவலர்கள்  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்த காவலர்கள் காவல் நிலைய முன்பாக கோலமிட்டு  பொங்கல் வைத்து பால் பொங்கிய பொழுது குலவை இட்டு பொங்கல் வைத்தனர்.

 பின் பொங்கலை  படையலிட்டு பூஜை செய்து பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 மேலும் இந்த பொங்கல் விழாவில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு பங்கேற்று காவல் நிலையத்தில் பணிபுறம் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கி பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.