மஞ்சளார் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க யோசிக்கும் எம் . எல் .ஏ.!
எம்.ஏ.கண்ணன்.
மஞ்சளார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாததால் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதில் கூலி ஆட்கள் செலவு அதிகரிப்பதோடு, வெள்ளப்பெருக்கு காலங்களில் 20 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மஞ்சள் ஆறு அணைக்கு கீழ் 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.
இதில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள மஞ்சளார் ஆற்றின் மறுகரையில் உள்ள 5000ற்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் ஆற்றில் இறங்கி கடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விவசாய விலை நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதிலும், விளைந்த விளைபொருட்களை கொண்டு செல்வதிலும் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
ளிந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மஞ்சளார் ஆற்றின் குறுக்கே விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலம் கட்டி தர கோரிக்கை விடுத்தும் இதுவரையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மஞ்சளார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் விவசாய நிலங்களுக்கு எளிதில் சென்று வர முடியும் என்பதோடு, விவசாய விளைபொருட்களை கொண்டு வருவதற்கு ஏற்படும் கூலிச் செலவு குறையும் என்பதால் மஞ்சளார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர விவசாயிகள் கோருகின்றனர்.
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரிடம் கேட்டபோது பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ரூம் போட்டு யோசிப்பாரோ?