திடீரன அலறிய சைரன்கள்... இஸ்ரேலை அலறவிட முயலும் ஹவுதிபடையினர்!

திடீரன அலறிய சைரன்கள்... இஸ்ரேலை அலறவிட முயலும் ஹவுதிபடையினர்!

ம.பா.கெஜராஜ்,

  இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவில் நேற்று திடீர் சைரன் சத்தம் அலறியது. இதனால் மக்கள் பீதியட்ய்ந்தனர்.

  இந்நிலையில் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும்,மவை டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

    கடந்த 2023 நவம்பர் முதல், ஹவுதி படைகள் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது நினைவிருக்கலாம்.

 அப்படியிருக்க நேற்றைய தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று மறுக்கப்பட்டாலும், ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

   டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் முக்கிய பகுதியை குறிவைத்து, ஹைப்பர்  சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.

 ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த ஏவுகணை தாக்குதல் பாதியில் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.