கலசலிங்கம் கல்லூரியில் பொங்கலோ.... பொங்கல்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி!
கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வணிகவியல் துறையில் தமிழர் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றத்து.இந்நிகழ்வை வேந்தர் முனைவர் ஸ்ரீதர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்வாக கோலப்போட்டி, பாட்டில் நீர் நிரப்புதல், பொங்கல் வைத்தல், லெமன் வித் ஸ்பூன், பானை உடைத்தல், இசை இசை நாற்காலி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 500க்கு மேற்பட்ட வணிகவியல் துறையின் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் முனைவர் சீ.கார்த்திக், பேராசிரியர்கள் முனைவர் திருமதி எஸ்.ராணி, திரு. ராமகிருஷ்ணன், முனைவர் திருமதி ஜி.தாமரைச்செல்வி, முனைவர். இரமேஷ் பாண்டி, திருப்பதி. லட்சுமி வேனன், திரு.ம.கருப்பசாமி, திருமதி ஷாபியர் ஆகியோர் முன்னிலையில் வணிகவியல் துறையில் கொண்டாடப்பட்டது.
இதில் துணைத் தலைவர் ஸ்ரீ. சசி ஆனந்த், துணைவேந்தன் முனைவர் எஸ். நாராயணன், முனைவர் வி. வாசுதேவன் மற்றும் துணையின் புல முதன்மையர் முனைவர் பி. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.