லோன் கொடுக்குறீங்களா? தேர்தலை புறக்கணிக்கவா? கலக்கிய பெண்கள்!!

கு.அசோக்,
கறவை மாடுகளுக்கு லோன் தராமல் அலைக்கழிக்கும் வங்கியை கண்டித்து பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகைகள் ஏந்திய மகளிர் சுய உதவி குழு பெண்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசி அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு செயல்பட்டு வருகிறது.
இந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கறவை மாடுகளுக்கு லோன் தருவதாக இந்தியன் வங்கி மேலாளர் 50க்கும் மேற்பட்ட பெண்களின் வங்கி கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் போடச் சொல்லி இருக்கிறார்.
மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் வங்கி கணக்கில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கறவை லோன் தராமல் அழைக்கழித்து வந்துள்ளார்.
இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஊராட்சி அலுவலகம் முன் சாலையில் போட்டு வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
அப்பக்கூட வங்கி மேலாளர் மூச் விடவில்லை.
நல்ல மனிதர்.