திருப்பத்தூர்:- 15 துறைகளை சார்ந்த 16840 பணியாளர்களுக்கு பூஸ்ட்டர்!

திருப்பத்தூர்:- 15 துறைகளை சார்ந்த 16840 பணியாளர்களுக்கு பூஸ்ட்டர்!

 ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

   தொடந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மற்றும் பல்வேறு துறைகளை சார்;ந்த அரசு அலுவலர்கள் பலர் ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டர்கள்.

  மாவட்டத்தில் வருவாய் துறையில் 474 பணியாளர்கள், காவல்துறையில் 605 பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறையில் 3106 பணியாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள் அலுவலகத்தில் 1383 பணியாளர்கள், நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் 125  பணியாளர்கள், பொது சுகாதாரத் துறையில் 2336 பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறையில் 5108 பணியாளர்களும்,

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 1539 பணியாளர்கள்,   இணை இயக்குநர் கால்நடை வளர்ப்பு அலுவலகத்தில் 78 பணியாளர்கள்மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் 302 பணியாளர்கள், இணை இயக்குநர் வேளாண்துறையில் 126 பணியாளர்கள்ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அலுவலகத்தில் 1559 பணியாளர்களும்,

  துணை இயக்குநர் தோட்டக்கலை அலுவலகத்தில் 37 பணியாளர்கள், மகளிர் திட்ட அலுவலகத்தில்  62 பணியாளர்கள் என மொத்தம் 15 துறைகளை சார்ந்த 16840 பணியாளர்களில் தகுதியான பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

  மேலும் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் 500 நபர்களுக்கு  ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த முன் களப்பணியாளர்கள் அனைவரும் இந்த ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.என்சிஇ.தங்கையாபாண்டியன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பாராஜூ, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் திருமதி.பானுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.