போக்குவரத்து அலுவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த டி.ஐ.ஜி. ஆனி விஜயா!

கு.அசோக்,
போக்குவரத்து அலுவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த டி.ஐ.ஜி. ஆனி விஜயா சாலையில் இறங்கி ஆய்வு நடத்தினார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் ஆனி விஜயா இன்று வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மக்கான் சிக்னலில் ஆய்வு செய்தார்.
அப்போது போக்குவரத்து காவலருக்கு கவணத்துடன் பணியாற்றி சரியான நேரத்தில் சிக்னல்களை மாற்ற வேண்டும் என அறிவுரை கூறினார்.
பின்னர் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்க காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் புகார்தாரர்களை காக்க வைக்கக்கூடாது என்று நிலைய ஆய்வாளார் செந்திலுக்கு சொன்னார்.
தொடர்ந்து மேற்படி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டிஜஜி அவர்கள் முன்னறிவிப்பின்றி களம் வந்தது போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.