இரண்டே வீட்டுகாரர்களுக்கு முப்பது லட்சம் அரசு பணமா?

ஆர்.ரவி காலேப்,
ஆண்டுகணக்கில் பாதை சரியில்லை, மாதக்கணக்கில் தண்ணிர் இல்லை, ஆனால் புதிய லேஅவுட்டில் ஓரிரு வீடுகளே உள்ள நிலையில் அங்கு பாதை, குடிநீர் போன்றவற்றுக்கு அரசு பணம் ஒதுக்கியிருப்பதாக மக்கள் பொங்குகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி இரண்டாம் நிலை பேரூராட்சி உள்ளது. அங்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி சுமார் 30 லட்ச ரூபாயக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது .
மேற்படி தாழக்குடி பேரூராட்சியின் பல பகுதிகளிலும், ரத வீதிகள் ஏரியாவிலும் மக்கள் நடமாட முடியாதபடி ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் பல தெருக்கள் மகா மோசமாகவும் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் குழாய் உடைந்து நாட்கள் பல ஆகியும், அவற்றை சம்மந்தப்பட்டவர்கள் சரி செய்யவில்லை.
மேற்கண்ட பகுதிகள் மக்கள் பயன்படுத்த முடியாதபடி இருக்கின்ற தருவாயில் புதிதாக விவசாய நிலத்தில் வீட்டுமனை பிரிவு செய்யப்பட்ட இடத்தில், ஒரிரு குடியிருப்பு உள்ள இடத்திற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது பாரபட்சமாகும்.
இதுவரை பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் கூட கொடுக்காத இடத்திற்கு 30 லட்ச ரூபாய் டெண்டர் செய்து பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சமூக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அப்படி ஏதும் நடவடிக்கை இல்லையெனில் இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுவோம் என்கிறார்கள்.
பார்ப்போம்.