கொரோனா ஊசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் சிறப்பு! ஆட்சியர் பெருமிதம்!

கொரோனா ஊசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் சிறப்பு! ஆட்சியர் பெருமிதம்!

Ma.ba.Gajaraj,

  கீழுள்ள லிங்கை சொடுக்கி இந்த செய்தியை ஆடியோவாக கேட்டுக் கொள்ளலாம்.

  மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், சிறப்பாக செயல்படும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும்.

  இப்படித்தான் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் பெருமிதம் கொண்டிருக்கிறார்.

  தடுப்பூசி செலுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு சாலை துவங்கி, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் செவிலியர்கள் முகாமிட்டிருக்கிறார்கள்.

   கொரோனா தடுப்பூசி உபகரணங்களை வைத்துக் கொண்டு தடுப்பூசி இடும் பணிகளுக்காக அவர்கள் பணிக்கப்பட்டுள்ள நிலையில், சிறார்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.

   இந்நிலையில் தான் மேற்படி ஆட்சியர் சொன்னவிதமாக, மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், சிறப்பாக செயல்படும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும்  ஒன்றாக விளங்குகிறது.