பழனி கோவிலை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசியல்வாதிகளும்- செக்யூரிட்டிகளும்!

பழனி கோவிலை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசியல்வாதிகளும்- செக்யூரிட்டிகளும்!

T.Vadivelu

  பழனி கோவிலை உள்ளூர் அரசியல்வாதிகளும் தனியார் செக்யூரிட்டிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக திருமஞ்சனம் எடுத்துச் செல்லக் கூடியவர்கள் கால்நடையாக சுமந்து மலைக்கு சென்று அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

 இக்கோயிலில் திருமஞ்சனம் செல்வதற்கு கூட அனுமதி இல்லாமல் காக்க வைத்து அபிஷேகம் செய்யக்கூடிய நிலையில் பழனி மலை கோவில் உள்ளது. பக்தர்களை ஆங்காங்கே காக்க வைத்து சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.  

 அதுமட்டுமின்றி உள்ளூர் விஐபிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கட்சி சார்ந்த நபர்களான பலர் அங்கு கோவில் அதிகாரிகள் போலவும், அமைச்சர்கள் போலவும் செயல்பட்டு சாமி தரிசனத்தை கொச்சை படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்வதற்கு பல மணிநேரம் காத்திருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதியோர்களும். குழந்தைகளும் பசியுடன் நின்று சாமி தரிசனம் செய்யக்கூடிய சூழ்நிலையை காணப்பட்டு வருகிறது.

 இந்த சமாச்சாரங்களை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கூட அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. திருக்கோவிலுடைய ஆணையர் நிலையும் இதே கதைதான்.

 அதே போல் திருமஞ்சனம் செல்லக்கூடிய பாதை முழுவதும் அடைக்கப்படுகிறது. ஏன் அடைக்கிறீர்கள் என்று பக்தர்கள் கேள்வி கேட்டால் பக்தர்களை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த தனியார் செக்யூரிட்டிகளை ஏவுகிறார்கள்.

 அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதைக் களைய வேண்டும் என பக்தர்கள் கோருகிறார்கள்.