மாணவர் சேர்க்கை வலியுறுத்தல்!

கி.தமிழ் மொழி,
பொம்மிக்குப்பம் கிராமத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்த வட்டார கல்வி அலுவலர்கள்
திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் கிராமத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி இன்று வாகன பிரசாரத்தை, வட்டார கல்வி அலுவலர்கள் நெடுஞ்செழியன், கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி வரவேற்புரை ஆற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன், 5- வார்டு உறுப்பினர் கோமதிஅசோகன், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள்& உறுப்பினர்கள் பொதுமக்கள் என்று திரளாக கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றியுரை கூறினார்.