ஏப்ரல் 30- மனதின் குரல் 100! பிரதமரின் முக்கிய பேச்சு!

ஏப்ரல் 30- மனதின் குரல் 100! பிரதமரின் முக்கிய பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

https://mail.google.com/mail/u/1/?ogbl#inbox/FMfcgzGsmNSTFjrmtBCXFLpnPGfMJNvg

 நாளை ஏப்ரல் 30-ம் தேதி காலை 11 மணிக்கு மனதின் குரல் 100 வது எபிசோடில்  பாரத பிரதமர் மேதகு பிரதமரின் முக்கிய பேச்சு இடம் பெறவிருக்கிறது.

இதனையொட்டி இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்குட்பட்ட சுமார் 300 மாவட்டங்களில் எப். எம். துவங்கப்பட்டிருக்கின்றன.

  இந்தியாவின் மூலை முடுக்கு கிராமங்களுக்கு எல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று அதன் துவக்க விழாவில் பிரதமர் பேசியிருக்கிறார்.

 மனதின் குரல் என்பது இந்திய வானொலி நிகழ்ச்சியாகும்.

இந்த வானொலி நிகழ்ச்சியின் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3, 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன், தேசியக் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார்.

 இந்தி மொழியில் வெளியாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை இந்தி மொழி அறியாத மக்கள் கேட்கும் பொருட்டு, உடனடியாக அனைத்து 29 முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.

 மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்".

  இந்நிலையில் 100 வது மனதின் குரல் நிகழ்வை மக்கள் பார்த்து உணர பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.